search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர் பூங்கா"

    • வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
    • மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

    மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021-2022 ம் ஆண்டில் வண்டலூர் பூங்காவில் வனப்பகுதியில் திறந்த வெளியில் விடப்பட்டு உள்ள சிங்கங்களை அதன் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று பார்க்கும் சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.

    இதன் பின்னர் நோய் தொற்று குறைந்ததும் பூங்காவில் மூடப்பட்டு இருந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், இரவு நேர விலங்குகள் என ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டது.

    ஆனால் சிங்கம் சபாரி மட்டும் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இதனை சோதனை முறையில் தொடங்க பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இந்த ஆண்டு விலங்குகள் பரிமாற்றத்தில் 2 சிங்கங்கள் வந்து உள்ளன. வண்டலூர் பூங்காவில் தற்போது மொத்தம் 10 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் 3 சிங்களங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுக்கு முறையான பயிற்சி, மற்றும் உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

    சிங்கங்களின் இருப்பிடத்திற்கு வாகனங்கள் செல்லும்போது பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான வாகனங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் சிங்கம் சபாரி பயன் பாட்டுக்கு வரும் என்றார்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    • வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
    • வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர்.

    வண்டலூர்:

    சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஒரு ஆண் பார்வையாளர் திடீரென தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கூண்டுக்குள் இருந்த வெள்ளைப்புலி மீது வீசினார். இதை பார்த்த பூங்கா ஊழியர் உடனடியாக புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை கையால் தாக்கி மடக்கி பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது பார்வையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் காட்சி மற்றும் தண்ணீர் பாட்டில் வீசிய நபரை பூங்கா ஊழியர் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர்.
    • ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், ஏராளமான பறவைகள் உள்ளன.

    இதனைக்காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்த கால கட்டத்தில் பூங்காவில் பராமரித்து வந்த நீலா, பத்ம நாபன் ஆகிய இரண்டு சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதே ஆண்டில் உடல் நலக்குறைவால் கவிதா, புவனா மற்றும் விஜி ஆகிய சிங்கங்களும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற சிங்கமும் பரிதாபமாக இறந்தன.

    இதனால் பூங்காவில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வையாளர்கள் வேனில் சென்று சிங்கங்கள் உலாவிடங்களில் பார்க்கும் பகுதி தடை செய்யப்பட்டது.இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்று பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதற்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர். புதிதாக கொண்டு வந்து உள்ள ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.

    பின்னர் சில வாரங்களில் இந்த புதிய சிங்கம் பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் அதன் உலாவிடம் பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது.
    • குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, மனித குரங்கு உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள். வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்து வரும் விலங்குகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து விலங்குகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இங்கிருந்து மற்ற பூங்காவுக்கு தேவையான விலங்குகள் அல்லது பறவைகளை கொடுப்பது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒரு வயதான சிங்கம் மருத்துவ பராமரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது 2 சிங்கங்கள் இறந்தன. இதனால் பூங்காவில் உள்ள ஆண், பெண் சிங்கங்கள் விகிதம் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை விலங்குகள் பரிமாற்றத்தில் பெற திட்டமிடப்பட்டது.

    இதற்காக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது. இதனால் குஜாரத்தில் இருந்து ஆசிய சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய சிங்கங்களை வழங்க குஜாராத் பூங்கா தற்போது மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சிங்கங்களை பெற அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐதராபாத் மற்றும் திருப்பதி உயிரியல் பூங்காவை நாடி உள்ளனர். விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு இமாலயா கரடியும், மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிறு கரடியும் வர உள்ளது. மேலும் வண்டலூர் பூங்காவுக்கு செஞ்சியில் மீட்கப்பட்ட ஒரு கரடி வர உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றாற்போல் தற்போதே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைகாலம் ஆரம்பமானதை தொடர்ந்து பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு போன்ற விலங்குகளுக்கு மதிய வேளையில் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவை ஷவரில் உற்சாக குளியல் போட்டு செல்கின்றன.

    குட்டையில் தேங்கி உள்ள தண்ணீரில் யானைகள் உற்சாக ஆட்டம் போடுகின்றன. செயற்கை அருவியில் இருந்து விழும் தண்ணீரில் மனித குரங்குகள் அவ்வப்போது வந்து தங்களது உடலை தண்ணீரில் நனைத்து சூட்டை தணித்து செல்கின்றன. இது பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனித குரங்குகளுக்கு மதிய வேளையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதேபோல் மற்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கோடைக்காலம் தொடங்குவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பறவைகள் இருப்பிடங்களுக்கு அருகே தாகத்தை தீர்க்க கூடுதலாக ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்படுகிறது.

    மேலும் பறவைகள் அமைக்கப்பட்ட கூண்டை சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகூண்டுகளின் உள்புறம் குளிர்ச்சியான சூழலில் இருக்கும்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கோடை காலத்தை சமாளிக்க பறவைகள், விலங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.

    • காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

    வண்டலூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.

    கூடுதல் நுழைவுச் சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.

    பூங்கா நிர்வாகம் செய்த பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

    14-ந்தேதி 7,630 பேர், 15-ந்தேதி- 17,762 பேர், 16-ந்தேதி 34,183 பேர், 17-ந்தேதி, 31,440 பேர் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 9 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். இந்தியருக்கு ரூ.40-ம், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம் தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக வசூலித்தது.

    • வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • தொழிலாளர்களின் போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயோமெட்ரிக் முறையை, ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வண்டலூர் பூங்காவில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. உயிரியல் பூங்கா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளரும், ஏ. ஐ சி. யூ. டி.யூ மாநில சிறப்புத் தலைவருமான இரணியப்பன் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, பூங்காவில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரம் தோறும் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
    • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.

    இதனால் இன்று (10-ந் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
    • வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 180 வகையான சுமார் 2400-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்கு கள் உள்ளன.

    இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விலங்குகள் பரிமாற்றம் திட்டம் மூலம் குஜராத்தில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை பெற திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் ஒரு வெள்ளைப் புலி லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொடுத்து அங்கிருந்து ஒரு பெண் சிங்கம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விலங்குகள் இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றார்போல் இந்த பூங்கா இயற்கையாகவே அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. வண்டலூர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளப்பாதைகள், ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் கூட்டத்தின்போது வண்டலூர் பூங்கா பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே பார்வையாளர்கள் கட்டணம் உயர்வு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

    தற்போது வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான கட்டண வித்தியாசத்தை நீக்க உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான வரவு, செலவு திட்ட முன்மொழிவும் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்க சாய் தளங்கள், பிரத்யேக வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் பூங்காவை மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சுற்றி பார்க்க முடியும்' என்றார்.

    ×